எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நீண்ட நாள் விடுமுறையுடன் பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபை இதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும், இதேபோன்று தனியார் துறையினரும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர்.
இதனடிப்படையில் எந்தவித வருமானத்தையும் எதிர்ப்பார்க்காமல், சுமார் 600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன், தேவைக்கு அமைவாக பயண சேவைகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ரயில் சேவைகளையும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேடமாக அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, பதுளை, வெலிஹத்த வரையில் மேலதிக ரயில் சேவைகளை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்தாக தெரிவித்தார்.


