அமெரிக்காவில் தலைமையகம்; இந்தியாவிற்குள் மீண்டும் வரவிருக்கும் டிக்டாக்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவில் தலைமையகம்; இந்தியாவிற்குள் மீண்டும் வரவிருக்கும் டிக்டாக்!

சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது அதில் முக்கியமானது டிக்டாக் மற்றும் ஹலோ போன்ற ஆப் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் சுமார் 100,000 கோடிக்கும் க்கும் மேல் மேல் நஷ்டம் அடைந்த டிக்டாக் நிறுவனம் அதிரடியாக ஒரு சில முடிவை எடுத்தது. அதன்படி சீனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் ஒரு நாட்டில் டிக்டாக்கின் தலைமை அலுவலகத்தில் நிறுவ முயற்சி செய்தது.

மேலும் இதுகுறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகம் அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் லண்டனில் ஓர் நிறுவவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் டிக்டாக் தலைமையகம் அமைக்க பலத்த எதிர்ப்பு இருப்பதன் காரணமாக இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தலைமையகம் அமைக்க டிக்டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சீனா ஊழியர்கள் ஒருவர் கூட இல்லாமல் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க ஒப்புக் கொண்டதால் இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டின் டிக்டாக் தலைமையகம் விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விரைவில் இந்தியாவில் டிக் டாக் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.