தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு நாளை மறுதினம் (31) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துக்கள் மாத்திரமன்றி மாகாண போக்குவர்து அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் 600 பேருந்துகளும் சேவைக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

$ads={1}

இதற்கு மேலதிகமாக புகையிரத திணைக்களத்தின் அனைத்து புகையிரதங்களும் குறித்த விசேட நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.