இன்று UAE மற்றும் கத்தாரில் இருந்து சுமார் 100 பேர் அழைத்து வரப்பட்டனர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று UAE மற்றும் கத்தாரில் இருந்து சுமார் 100 பேர் அழைத்து வரப்பட்டனர்!!

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 100 பேர், 03 நாடுகளிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து இன்று (18) அதிகாலையும் நேற்றிரவும் (17) அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த PCR கட்டணம் உள்ளிட்ட, இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா ஹோட்டல்களுக்கான கட்டணமும், அவர்களது விமானச்சீட்டுக்கான கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது அரசாங்கத்தினால் நடாத்திச் செல்லப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில்,  உச்சபட்ச அளவில் தனிமைப்படுத்தப்படுவோர் காணப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து  இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.