
குறித்த ஒரு வார காலத்தினுல் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் உலமா சபைக்கு எதிராக தேரர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஒரு வார காலத்தினுல் உலமா சபை இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் நாட்டில் அனைத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்க மக்களை வழிநடத்துவதாகவும் ரதண தேரர் அச்சுறுத்தினார்.
இருப்பினும், ஒரு வாரம் என கூறி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை முஸ்லிம் கடைகள் எதுவும் புறக்கனிக்கப்படவில்லை.
இதற்கிடையில், தனது அபே ஜனபல கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்றில் கடந்த திங்கள் (20) அன்று உறையாற்றிய ரதண தேரர், புர்கா மற்றும் மதரஸா பள்ளிகளை தடை செய்ய பொதுத் தேர்தல் வரை உலமா சபைக்கு கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

