களுத்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டதை முழு நாடும் அறியும்.
பிரதமரான ரணில் விக்ரமசிங்க தனக்கு தேவையான வகையில் என்னை ஆட்டிவிக்க முயற்சித்தார். எனினும் அவரால் அதனை செய்ய முடியாமல் போனது. ரணில் விக்ரமசிங்கவை எனக்கு தேவையானபடி ஆட்டுவித்தேன்.
இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருப்பதை தடுத்து, இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.