நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துவிபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (06) காலை 10.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். லொறியில்ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூடைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கைமேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.