நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாணதுறை, ஹொரெதுடுவ பகுதியில் நேற்று (06) அதிகாலை 5 மணிக்கு குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின்போது 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து குசல் மென்டிஸ் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.