பெருமளவு பாடசாலை மாணவர்களின் PCR அறிக்கை இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெருமளவு பாடசாலை மாணவர்களின் PCR அறிக்கை இன்று!

நாட்டின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்களின் PCR பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையில் ராஜாங்கனை பாடசாலை மாணவர்கள் 90 பேரும் ஹபராதுவையைில் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் PCR முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளன.

ராஜாங்கனையில் மாத்திரம் 300க்கும் அதிகமானோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டவராகும்.

கடந்த முதலாம் திகதி அவர் விடுமுறை பெற்று காலி மற்றும் ஹபராதுவ பிரதேசத்தின் பல பகுதிகளில் பயணம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹபராதுவ பிரதேசத்தில் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.