தேசிய அடையாள அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய அடையாள அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் வரை கிடைத்த விண்ணப்பங்களுக்காக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரின் கையெழுத்துடன் தற்காலிக அடையாள பத்திரம் வழங்கப்படும் என ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான 30 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுக்காக தற்காலிக அடையாள பத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தற்காலிக அடையாள பத்திரங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கிருந்து மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம சேகவர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் அதனை உரிய நபர்களிடம் கையளிப்பார்கள் எனவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.