பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் அதன் மதிப்பை நன்கு அறிந்திருந்தாலும், சிலர் எனக்கு வாக்களிக்கக் கூடாது எனக் கூறி எனது வாக்காளர்களை மூளை சலவை செய்து அவர்களை எனக்கு வாக்களிக்காமல் செய்ய முயற்சிக்கின்றனர்.
அவர் பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றினிலேயே இவ்வாறு பேசினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் பேணிய நட்பை இன்னும் பாதுகாத்து வருகிறேன். எனக்கு எப்போது வேண்டுமானாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் அளவுக்கு வலிமை உள்ளது. அத்தகைய ஒரு நபரின் மதிப்பை இன்று பொலன்னறுவையில் சிலர் மறந்துவிட்டனர்.
மேலும் எனது ஆதரவாளர்களை எனக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்பவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் பொலன்னறுவை மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள், உங்கள் கிராமத்தானின் பலத்தையும், மதிப்பையும் புரிந்துகொண்டு பேசுங்கள்.' என தனது உரையில் தெரிவித்திருந்தார்.