பாடசாலை ஒன்றுக்கு அருகில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை ஒன்றுக்கு அருகில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

கிண்ணியா தேசிய பாடசாலை ஒன்றுக்கு அருகில் வெடிபொருட்கள் வைத்திருந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த நபர் நேற்றைய தினம் (26) கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 201 கிராம் 400 மில்லிகிராம் வெடிபொருட்களும், 4 டெட்டனேட்டர்கள் மற்றும் சேவைக் கம்பிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

42 வயதுடைய சந்தேக நபர் தற்போது கிண்ணியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.