IDH இலிருந்து தப்பித்து சென்றதாக வெளியான செய்தி தொடர்பில் IDH இயக்குனர் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IDH இலிருந்து தப்பித்து சென்றதாக வெளியான செய்தி தொடர்பில் IDH இயக்குனர் விளக்கம்!

கொறொனா நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் IDH இலிருந்து தப்பிசென்று விட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் போலியானது என தேசிய தொற்றுநோய்ப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது போன்ற தவறான பிரச்சாரத்தை பரப்புவதால், பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் தொடர்ந்து இது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறையில் உள்ளன, தேவையற்ற மற்றும் தவறான பிரச்சாரங்களை பரப்பி சமூகத்தை தவறாக வழிநடத்துவதைத் தடுப்பது அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு என்பதை மேலும் வலியுறுத்தினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.