வாய்த்தர்க்கத்தில் தந்தையைக் குத்திக் கொன்ற மகன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாய்த்தர்க்கத்தில் தந்தையைக் குத்திக் கொன்ற மகன்!

நேற்று (18) மாலை 5.00 மணியளவில் பல்லம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரேலியா - கலுகெலே பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, தந்தை மீது மகன் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த தந்தை, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.