நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு சட்டம், வைரஸ் பரவல் என்பவற்றின் காரணமாகக் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
அதனைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன் கருதி கல்விப் பொதுத்தராதர பரீட்சை, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை களைச் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.