மேலும் 12 பேருக்கு பாதிப்பு! முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 12 பேருக்கு பாதிப்பு! முழு விபரம்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 666 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1,988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 04 பேர் சேனபுர நலன்புரி முகாமில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். கந்தக்காடு நலன்புரி முகாமில் இருந்து 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஓமான் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.