கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 666 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1,988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 04 பேர் சேனபுர நலன்புரி முகாமில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். கந்தக்காடு நலன்புரி முகாமில் இருந்து 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் ஓமான் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.