உறுதி செய்யப்பட்ட 16 கொரோனா தொற்றாளர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு சிறைக்கைதிகள் மற்றும்பயிற்றுனர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் இராணுவ முகாம் ஒன்றல்ல, நீதி அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு நிலையம் எனவும்அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் மட்டும் 96 நபர்கள் கொரோனா தொற்றுக்க்ய் இலக்கானார்கள்.
நேற்ற்ய் இராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கான ஆறு நபர்களும் புனர்வாழ்வு நிலைய பயிற்றுனருடன்நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார்.
விடுமுறைகளில் வீடுகளுக்கு சென்றிருக்கும் புனர்வாழ்வு நிலைய அனைத்து பயிற்றுனர்களும் உடனடியாக திரும்பி வருமாறுவலியுறுத்தப்பட்டுள்ளதோடு அவர்கள் வேறு பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்திருக்கு வாய்ப்பு இருப்பதானால் நாட்டில் ஏனையபாகங்களிலிருந்தும் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் இனி வரும் காலங்களில் இனங்காணப்படலாம் எனவும் இராணுவதளபதி தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான சிறைக்கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், மக்கள் சுகாதார அமைச்சின்வழிமுறைகளை சரிவர பின்பற்றி நடக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.