கொரோனா வைரசின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரசின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது!

நாட்டில் பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத்துறையினரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றமையினை மேற்கொள் காட்டியே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் நாளாந்தம் 2,500 பி.சி.ஆர். சோதனைகளை பரிந்துரைத்தபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக நாளொன்றுக்கு 500-1600 பி.சி.ஆர். சோதனைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வைரஸ் பரவுவதை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் மேலும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 5,000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் வைரஸின் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.