சாரதி அனுமதி பத்திரம் இனி இராணுவத்தினரே வழங்கவுள்ளனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாரதி அனுமதி பத்திரம் இனி இராணுவத்தினரே வழங்கவுள்ளனர்!

எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரங்களை இராணுவத்தினர் ஊடாக வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. அவ்வாறு சாரதி அனுமதி பத்திரத்தை பெற 1,340 ரூபா என்ற தொகை பணம் செலவிடப்படுகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.