இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று (02) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் இன்று முற்பகல் விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவில் ஆஜராகவுள்ளார்.
2011ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் குறித்து வாக்குமூலம் பெற சங்கக்கார இன்று அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.