ஞானசாரரின் பேஸ்புக் பக்கம் தடை – ரத்ன தேரர் கொந்தளிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசாரரின் பேஸ்புக் பக்கம் தடை – ரத்ன தேரர் கொந்தளிப்பு

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.


அத்துடன், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாதி என்று குறிப்பிட்டே அவரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை பொறுத்த வரையில் அவர் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் இனவாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.