விமான நிலையத்திற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான நிலையத்திற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது!

கட்டுநாயக்க விமானநிலையயத்தின், பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், விருந்தினர்கள் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (06) முதல் இவ்வனுமதி வழங்கப்படுவதாக, விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.


பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடந்துகொள்வது கட்டாயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் பயணிகள், ஊழியர்கள் தவிர்ந்த விமான நிலையத்திற்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் பயணிகளுடன் 03 பேர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.