கந்தக்காடு மூலம் பரவியுள்ள கொரோனா வைரசினை கட்டுப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள அவர் இது சவால்தான் ஆனால் முன்னர் நாங்கள் செய்தது போன்று இதனையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டை மீண்டும் திறந்த பின்னர் மக்களும் ஸ்தாபனங்களும் கொரோனா வைரசினை சாதாரணமாக கருதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களும் ஸ்தாபனங்களும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படைகளை கூட பின்பற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கான மக்களினதும் ஸ்தாபனங்களினதும் ஆர்வம் குறைகின்றதை அவதானிக்க முடிவதாக அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சில ஸ்தாபனங்களில் கைககளைகழுவுவதற்கான பொருட்களை காணமுடியவில்லை,சில ஸ்தாபனங்களில் தண்ணீரை காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்,அவர்கள் முகக்கசவசத்தினை கீழே இறக்கிவிடுவதுடன் அவ்வப்போது முகத்தை தொடுகின்றனர் என அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.