குறித்த அந்த வீடியோவில், ஒரு முஸ்லீம் பெண் தலையை மறைத்து அணிந்து (முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடை) வங்கியில் நுழையத் தயாராகும் போது தனது தலை மறைப்பை அகற்றிவிட்டு உள்ளே நுழையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அங்கு குறித்த பெண்ணால் மறுக்கப்பட்டு, அவரது கணவரால் நியாயம் கோரி அமைதியற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, வங்கி உள்ளே தலை மறைக்கப்பட்ட நிலையில் அனுமத்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த இந்த காணொலி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சம்பத் வங்கியுடன் நெருங்கிய வணிக உறவு கொண்ட வாடிக்கையாளரும் தீவிர ராஜபக்ஷ ரசிகருமான ஒரு முக்கிய தொழிலதிபரான நிமல் பெரேரா எனும் நபர் தனது ட்விட்டர் கணக்கில் சம்பத் வங்கியில் சேவை பௌத்த சிங்கள மக்களுக்கு மாத்திரம்
சேவையை வழங்க அமைக்கப்பட்ட வங்கி என கூறியுள்ளார். இருந்த போதிலும் அவர்களை ஒரு இனவாதியாக கருத வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில், “சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இல்லை என்பதை எனக்குத் தெரிவித்த நிமல் பெரேராவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
சம்பத் வங்கியுடன் தொடர்புபட்ட எனது
கணக்கை இனம், மதம் வேறுபாடு பாராத வங்கி ஒன்றுக்கு மாற்ற எனது அலுவலகத்திற்கு பரிந்துரைத்துள்ளேன்.
இது உங்கள் வங்கிக்கு ஒரு பெரிய இழப்பாக இருக்காது, ஆனால் இது எனக்கு முக்கியமான ஒன்று" என தெரிவித்திருந்தார்.