கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய அறிக்கை !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய அறிக்கை !

கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா என்பது இதுவரை தமது அமைப்பால் அறிவிக்கப்பட்ட மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்;திய கலாநிதி டெட்ரோஸ் அத்தனொம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தமது அவசரக்குழுவை கூட்டி கொரோனா தொடர்பில் மறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தினால் ஐந்து தடவைகள் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டன.

இரண்டு தடவைகள் எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய சந்தர்ப்பங்களிலேயே இந்த அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டன.

எனினும் தற்போதுள்ள நிலை மோசமான ஒன்றாகும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன்க்களை விட அதிகரித்துள்ளது.

650,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் கொரோனா இன்று உலகத்தை மாற்றிவிட்டது. சமூகங்களையும் நாடுகளையும் ஒன்றிணைந்து பின்னர் தவிர்த்து விட்டது.

கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.