உபுல் தரங்க கிரிக்கட் ஊழல் செய்தாரா? விசாரணைகளுக்கு ஆஜரானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உபுல் தரங்க கிரிக்கட் ஊழல் செய்தாரா? விசாரணைகளுக்கு ஆஜரானார்!

இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே தரங்க இவ்வாறு குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகி 6 மணித்தயாலங்கள் வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.