கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே தரங்க இவ்வாறு குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகி 6 மணித்தயாலங்கள் வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.