இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விபரங்களை தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் ஈடுபாடின்றி போட்டி எவ்வாறு போட்டி நிர்ணயிக்கப்பப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
போட்டியின் போது விளையாட்டு அமைச்சராகவும் பொறுப்பான நபராகவும் இருந்த அவர், போட்டி நிர்ணயிக்கும் சம்பவம் குறித்து அறிந்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அவர் மேலும் தெறிவிக்கையில் 'இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளையாட்டு அமைச்சகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன. விளையாட்டுகளில் ஊழலைத் தடுப்பது தொடர்பான சட்டங்கள் எங்களிடம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.' என்றார்.
இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்படுவதற்கு வழி வகுத்து, அரசாங்கத்தில் அறிவிக்கவும் செய்து, விளையாட்டுகளில் ஊழலைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை உருவாக்கவும் இந்த ஊழல் வாய்ப்பைப் பெற்றுத் தந்ததாக அலுத்கமகே கூறினார்.
2013 ஆம் ஆண்டில் சட்டம் தொடர்பான அமைச்சரவைக்கு ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டு, விளையாட்டுகளில் ஊழலைத் தடுப்பது தொடர்பான இச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக இலங்கையை உருவாகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.