
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தற்போது பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம், இன்னும் சில கணக்கீடுகளை செய்து வருகிறோம். இந்த மறு கணக்கீடுகளுக்கு 63 பாடங்கள் உள்ளன, மேலும் "Z" மறு கணக்கீடு செயல்முறையை மீண்டும் கணக்கெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பில் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.' என தெரிவித்தார்.
மேலும் மீள் திருத்த முடிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு முன்னதாக https://doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியகோபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் பொது சேவை பணிநிறுத்தம் காரணமாகவே பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

