இப்புதிய சேவை கடந்த ஜுலை மாதம் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட இச்சேவைக்கான அறிவித்தல் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கடந்த ஜுலை மாதம் 01ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானியில் 16 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 2019.08.22 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட இலங்கை ஆசிரிய சேவைப்பிரமாணக்குறிப்பு இவ்வர்த்தமானிப் பிரகடனத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக் கல்வித்துறையில் இதுவரை இருந்துவரும் இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றுக்கு அப்பால் புதிதாக இச்சேவை கல்விப்பரப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சேவைக்காக முதற்கட்டமாக 4,471 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 3,188 பேர் சிங்கள மொழி மூலமும் 1,283 பேர் தமிழ் மொழி மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.