மெர்வின் சில்வாவின் மகனை கைது செய்ய நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மெர்வின் சில்வாவின் மகனை கைது செய்ய நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது நண்பர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது தந்தையின் தேர்தல் பிரசாரத்துக்காக நண்பரிடம் மாலக சில்வா பணம் கோரியிருக்கிறார்.

இதன்போது அவரும் சுவரொட்டிகளை அச்சிட்டுத் தர சிறிய தொகை பணத்துக்கு இணங்கியுள்ளார். எனினும் ரீ-சேர்ட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபா அவசியம் என மாலிக சில்வா நண்பரிடம் கோரியுள்ளார்.

இதனை தன்னால் தரமுடியாது என்று அந்த நண்பர் கூறிவிட்டு மாலக சில்வாவை படிப்படியாக தவிர்க்க முயற்சித்தபோது மாலக சில்வா தமது பேஸ்புக்கில் தமது நண்பரை காணவில்லை என்றொரு பதிவை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை அறிந்த மாலக சில்வாவின் நண்பர் குறித்த பதிவை அகற்றி விடுமாறு கோரியபோது மாலக சில்வா அதனை அகற்ற முடியாது எனக்கூறி நண்பருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கடுவெல நீதிமன்றத்தில் நேற்று (17) பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து நண்பருக்கும் அவருக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலை செவிமடுத்த பின்னர் மாலக சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.