பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையில் இருந்து தெளிவளை வரையான பகுதிகளில் சேரி வீடுகளில் வாழும் மக்களுக்காக வீடுகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹேனமுல்ல, ரன்முத்து வீட்டு திட்டம் ஊடாக 54 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன.
$ads={1}
15 மாடிகளை கொண்ட இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் 2 அறைகள், ஒரு படுக்கை அறை, குளியல் அறை மற்றும் சமையலறை உள்ளடங்குகின்றன. ஒரு வீட்டின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவாகும்.
வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை மற்றும் மைதானம் ஒன்றையும் அமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.