இரண்டு இராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தக்காடு - புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் இராணுவ வீரர்கள் இருவரும் பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.