1958 ஆம் ஆண்டில் புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரிக்கு எதிரான தொடக்க ‘பிக் மேட்சில்’ 62 ரன்கள் எடுத்தபோது, ஸரூக்முதன்முதலில் திறனுக்கான அறிகுறிகளைக் காட்டினார், மேலும் வித்யார்த கல்லூரி அந்த வரலாற்று போட்டியில் டி.பி.விஜேசிங்க வின்தலைமையில் ஒரு இன்னிங்ஸ் இனால் வெற்றிபெற்றது.
இருப்பினும் பாடசாலையினை விட்டு வெளியேறிய பிறகு, ரக்பியில் தான் அவர் உண்மையில் பிரகாசித்தார். மற்றும் 1965 மற்றும் 1969 க்கு இடையில் கண்டி ஸ்போர்ட்ஸ் கிளப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அணித் தலைவர்களான வய்.சி.சாங், ஜயந்திஸ்ஸ ரத்வத்தே, மறைந்த டென்ஸில் கோப்பேகடுக ஆகியோரின் கீழ் ஸரூக்விளையாடியுள்ளார். அவரது ரக்பி பயிற்சியாளர்கள் மாரிஸ் பெரேரா மற்றும் டாக்டர் சங்கக்காரா. கண்டி மாநகராட்சியில் சேர்ந்தபிறகு அவர் 1963 மற்றும் 1965 க்கு இடையில் கிரிக்கெட்டில் கே.எம்.சி (KMC) யைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் கே.எம்.சி யின் சுகாதார துறைக்கு எதிராக 192 ஓட்டங்களை பெற்றார்.
இவர் ரக்பி மற்றும் கிரிக்கெட்டை விளையாடுவது மட்டுமல்ல, ஸரூக் ஒரு தகுதி வாய்ந்த ரக்பி மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளராகவும்ஆனார். கிரிக்கெட் நடுவராக தகுதி பெற்ற அவர் மத்திய மாகாண கிரிக்கெட் நடுவர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்வாங்கப்பட்டார். கிரிக்கெட் பயிற்சியாளராக, அவர் முதலில் எழுபதுகளின் பிற்பகுதியில் கம்பளை ஸாஹிரா கல்லூரியிலும், 1984 முதல் 1992 வரைமடவளை மதீனா மத்திய கல்லூரியின் ஜூனியர்ஸ் பயிற்சியாளராக தனது சேவையினை ஆரம்பித்தார். 1985 ஆம் ஆண்டில் பிரிவு III போட்டியில் மதீனா 15 வயதுக்குட்பட்ட அணி சாம்பியன்ஸ் பட்டத்தை சுவீகரித்ததோடு 1986 இல் பிரிவு II போட்டிகளில் இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
ரக்பி போட்டியின் பயிற்சியும் ஸரூக்கின் பணிகளில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது, அவர் முதலில் 1978 முதல் 1980 வரை கம்பளைஸாஹிர கல்லூரியில் தொடங்கினார். பின்னர் 1981 முதல் 1989 வரை கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில் ரக்பிக்கு பயிற்சி அளித்தார். பின்னர் 1981 ஆம் ஆண்டில் டைரல் முத்தையா கிண்ணத்தை கிங்ஸ்வுட் கல்லூரி அணி சுவீகரித்தத்தோடு, 1986 ஆம் ஆண்டில் அகிலஇலங்கை செவன்ஸ் சாம்பியண்ஸ் உம் ஆனது.
எண்பதுகளின் பிற்பகுதியில் 1991 வரை கண்டி தர்மராஜா கல்லூரியிலும் பயிற்சியளித்தார். கிங்ஸ்வூட்டில் லலித் விஜரத்ன, ஆனந்தகஸ்தூரியராச்சி, இப்ராஹிம் பிரதர்ஸ் மற்றும் தர்மராஜ கல்லூரியில் இந்திரஜித் பண்டாரநாயக்க போன்ற சில சிறந்த ரக்பி வீரர்களைத்உருவாக்கினார்.