ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாத் பதியுதீனின் தம்பி நேரடி தொடர்பு - VIDEO இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாத் பதியுதீனின் தம்பி நேரடி தொடர்பு - VIDEO இணைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோததரான மொஹமட் ரியாஜ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


விசாரணைகள் ஊடாக குறித்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் குண்டுதாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.