மஞ்சள் இறக்குமதியை கட்டுப்பாத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரம் இன்றி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காலத்தில் மஞ்சளுக்கான அதிக தட்டுப்பாடு நிலவியது.
சில வர்த்தகர்கள் மஞ்சளை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நுகர்வோர் விவகார ஆணையம், இதுபோன்று கட்டுப்பாட்டு விலையை மிஞ்சி பறிமுதல் மேற்கொள்ளும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.