- க. பொ. த உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் 7 முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை
- புலமைபரிசில் பரீட்சை செப்டம்பர் 13
- பாடசாலைகள் விடுமுறை ஜூன் 29 நிறைவு
- நான்கு கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படும்.
- தரம் 05,11 மற்றும் 13 வகுப்புகளுக்கு ஜூலை 06 ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.
அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.