ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய பொலிஸாருக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை! -பிரதி பொலிஸ் மா அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய பொலிஸாருக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை! -பிரதி பொலிஸ் மா அதிபர்

Deshbandu Thennakoon DIG
கொழும்பில் நேற்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸாருக்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை என மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து கலைக்கவேண்டிய தங்கள் சரியான கடமையை செய்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு சிலர் நிலத்தில் விழுந்து கிடந்தது ஆர்ப்பர்ட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக பொலிஸார் அவர்களை கைது செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டத்தினை மீறுபவர்களை எங்களால் அதிக அக்கறையுடன் நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலை நிலவுதால் தங்களிற்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.