ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து கலைக்கவேண்டிய தங்கள் சரியான கடமையை செய்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு சிலர் நிலத்தில் விழுந்து கிடந்தது ஆர்ப்பர்ட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக பொலிஸார் அவர்களை கைது செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டத்தினை மீறுபவர்களை எங்களால் அதிக அக்கறையுடன் நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலை நிலவுதால் தங்களிற்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு நன்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.