இணையத்தளம் வாயிலாக ஆடர் செய்யும் பொருட்கள் காணாமல் போவது தொடர்பில் - தபால் நிலைய பொறுப்பதிகாரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணையத்தளம் வாயிலாக ஆடர் செய்யும் பொருட்கள் காணாமல் போவது தொடர்பில் - தபால் நிலைய பொறுப்பதிகாரி

இணையத்தளங்களில் பொதுமக்கள் ஆடர் செய்த பொருட்கள் கிடைக்காமை குறித்து தபால் நிலைய அதிகாரிகளுக்கு ஏற்படும் குற்றச்சாட்டுகள் நியாமற்றதாக தபால் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இணையதளம் மூலம் பல இணையதளங்களினால் ஆடர் செய்யப்படும் தபால் பொருட்கள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவற்றில் சுமார் 45,000 சிறிய பார்சல்கள் அடங்கியிருந்தன. இலங்கையில் கோவிட்19  தொற்று பரவுவதற்கு முன்னர் மலேசிய அஞ்சல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் மூன்று மாதங்களுக்கும் பின்னரே இலங்கையை வந்தடைந்ததாக போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

தாமதமாக வந்ததன் காரணமாக அச்சிடப்பட்டிருந்த முகவரிகள் தொழில்நுட்ப பற்றாக்குறையால் படிக்க முடியாததாகிவிட்டன.

இதன் விளைவாக பொருட்கள் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.