இணையதளம் மூலம் பல இணையதளங்களினால் ஆடர் செய்யப்படும் தபால் பொருட்கள் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவற்றில் சுமார் 45,000 சிறிய பார்சல்கள் அடங்கியிருந்தன. இலங்கையில் கோவிட்19 தொற்று பரவுவதற்கு முன்னர் மலேசிய அஞ்சல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் மூன்று மாதங்களுக்கும் பின்னரே இலங்கையை வந்தடைந்ததாக போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
தாமதமாக வந்ததன் காரணமாக அச்சிடப்பட்டிருந்த முகவரிகள் தொழில்நுட்ப பற்றாக்குறையால் படிக்க முடியாததாகிவிட்டன.
இதன் விளைவாக பொருட்கள் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.