10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

அநுராதபுரம், ஸ்ராவஸ்திபுர பகுதியில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்றிரவு (26) இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அநுராதபுர பிரதி  பொலிஸ் மா அதிபர் அலுவலக சோதனை பிரிவினர் தெரிவித்தனர்.

46 வயதுடைய இச்சந்தேகநபர், கல்குலம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அவர் கடமை வேளையில் கஞ்சாவைக் கொண்டு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

இவர், அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.