கொள்ளை அடித்த பணத்தை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து ஒப்படைந்த நபர்; மொனராகலையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொள்ளை அடித்த பணத்தை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து ஒப்படைந்த நபர்; மொனராகலையில் சம்பவம்!

நபரொருவர் தான் திருடிய பணப்பையினை பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மொனராகலை பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (23) மொனராகலை பகுதியில் ஹோட்டல் ஒன்றுக்கு பக்கத்தில் இருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து பதினையாயிரம் ரூபா பணத்துடன் பணப்பை ஒன்று பெண்ணொருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் கணவர் ஒரு குத்தகை வசதியின் கீழ் பெறப்பட்ட அந்த முச்சக்கர வண்டியை ஒரு நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு அதில் கிடைக்கப்பெற்ற பணத்துடன் வீட்டிற்கு திரும்பும் போதே இது நிகழ்ந்துள்ளது.

உணவு வாங்குவதற்காக வேண்டி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு தனது கணவருடன் சென்றபோது அவர் தனது பணப்பையை மறந்துவிட்டு சென்றுள்ளார்.


பின்னர் காசு கொள்ளைபோனதை அடுத்து, மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை பதிவு செய்தனர், இதனை தொடர்ந்து காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு குறித்து ஹோட்டலுக்குச் சென்று ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரித்தனர்.

பின்னர் ஹோட்டலின் CCTV காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் பணப்பையைத் திருடிய நபர் தெளிவாகக் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று (24) காலை பொலிஸாரிடம் தானாகவே சரணடைந்துள்ளார்.

பின்னர் விசாரணையின் போது, அவர் அப்பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும், தனிப்பட்ட தேவைக்காக ஹோட்டலுக்கு வந்தபோது முச்சக்கர வண்டியின் பணப்பையை கண்டு திருடி விட்டு  சென்றதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

வீட்டுக்கு சென்றபின்னர் ஒருவித பீதி ஏற்பட்டதாகவும்
பின்னர் அவர் பயந்து பொலிஸ் நிலையத்திற்கு விறைந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நாளை மொனராகலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.