திருமண மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டது!

திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான ஆலோசனை தற்போது கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தொழிற்சாலை ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


அகில இலங்கை மண்டப மற்றும் உணவு விநியோக சங்கத்தினருடக்கிடையில் நேற்று (23) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தை பியகமவில் அமைந்துள்ள வைபவ மண்டபத்தில் நடைபெற்றது.


கொவிட் 19 தொற்று பரவலையடுத்து திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று சங்கத்தினர் இதன் போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதுடன் தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமம் என்று குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக தாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.