நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் கடுமையான உத்தரவு! மீறினால் சட்ட நடவடிக்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் கடுமையான உத்தரவு! மீறினால் சட்ட நடவடிக்கை

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் போகும் வரையில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படும் என்பதுடன் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிராந்திய நாடுகளில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.