கொழும்பு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழு 2012 ஆம் ஆண்டளவில் புற்றுநோய் மருந்துக்கான ஆய்வினை தொடங்கியது.
இந்த ஆய்வினை மேற்கொள்ள, அவர்கள் உலர்ந்த மண்டலத்தில் தோன்றும் ஃபுல்விஃபார்ம் ஃபோராமினிஃபெரா எனும் அரியவகை காளானைப் பயன்படுத்துகின்றனர்.
மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, 2015ஆம் ஆண்டில் அதற்கான அழற்சி எதிர்ப்பு கலவையை (Anti-inflammatory compound) கண்டுபிடித்தனர்.
பின்னர் குறித்த ஆராய்ச்சிக்கான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பிரித்தெடுத்தலுக்கான (Anti-cancer properties and extraction) தங்கள் காப்புரிமை (Patent) பெற்றுக்கொண்டனர்.
எனினும் இந்த ஆராய்ச்சி தொடர்பில் இலங்கையில் காப்புரிமை இன்னும் வழங்கப்படவில்லை.
உலகளவில், ஆண்டுதோறும் 22 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25,000.
மேலும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் படி, ஆண்டுக்கு 14,000 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.