அருங்காட்சியகங்களை பார்வையிட கட்டுப்பாடுகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அருங்காட்சியகங்களை பார்வையிட கட்டுப்பாடுகள்

தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அருங்காட்சியகங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொது விடுமுறைகள் தவிர, ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்காக அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் என, தேசிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அத்தோடு, பிற்பகல்
மணிக்கு பின்னர் அனுமதிச்சீட்டு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வேளையில் உச்சபட்சமாக 15 பார்வையாளர்கள் எனும் வகையில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையாளர் ஒருவரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

www.museum.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் இது குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.