டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ இந்த தாக்குதலை தான் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறையை சேர்ந்த இதுபோன்ற சிலரின் சமீபத்திய நடவடிக்கைகளினால் பொலிஸ் திணைக்களத்திற்கு களங்கம் ஏற்படலாம் என தெரிவித்துள்ள அவர், 'நான் பொலிஸாரின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதுடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அவர் தெரிவித்துள்ளார்.