கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 04 ஆம் திகதிவரை நடைபெறும்.
மூன்றாம் தவணை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறும்.
இரண்டாம் தவணை விடுமுறை செப்டம்பர் 05ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 04ஆம் திகதி வரை நீடிக்கும்.
இக்காலப்பகுதியிலேயே கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
மூன்றாம் தவணை விடுமுறை வழமை போன்று நவம்பர் 27 ஆரம்பமாகி 2021 ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.