வைத்தியர் ஷாபி எங்கே? பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியர் ஷாபி எங்கே? பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?

வரலாற்றில் என்றுமில்லாத அளவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மிக மோசமான முறையில் இனவாதம் மற்றும் மதவாதம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என சகல அடிப்படைவாதிகளும் ராஜபக்ச அணியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்த கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“வைத்தியர் ஷாபி என்ற ஒருவரை உருவப்படுத்தினர். தற்போது வைத்தியர் ஷாபி எங்கு இருக்கின்றார் என்று கேட்க விரும்புகிறேன்.

கருத்தடை மாத்திரை என்று கூறி நீண்ட கதையை ஒன்றை முன்னெடுத்தனர் என்பது நினைவிருக்கலாம்.


தற்போது அந்த கருத்தடை மாத்திரைக்கு என்ன நடந்தது?. தற்போது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?.

இவை பற்றி தற்போது எவரும் பேசுவதில்லை. வைத்தியர் ஷாபி இல்லை. கருத்தடை மாத்திரைகள் இல்லை.

இவை அனைத்தையும் பயன்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மிகவும் துரதிஷ்டவசமான வகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமது நாட்டில் மிக மோசமான முறையில் இனவாதம் மற்றும் மதவாதம் கையாளப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.