கடற்கரையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடற்கரையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) மாலை மீட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள்  தொடர்பாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, மன்னார்  நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த  நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலைப் பொலிஸார் படைத்தரப்பினர் மற்றும் விசேட அதிரடிப் படைப்பிரிவு இணைந்து நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுத்தனர்.

இதன்போது மீட்கப்பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பொதியில் காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.