இலங்கை வங்கிக்கு 220 மில்லியன் டொலர்களும், மக்கள் வங்கிக்கு 187 மில்லியன் டொலர்களும், வரையறுக்கப்பட்ட இலங்கைவணிக கூட்டுத்தாபனத்திற்கு 275 மில்லியன் டொலர்களையும் கடனாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார் . நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தாம் உட்பட பணிப்பாளர் சபையினருக்கு ஒரு வருடத்தில்இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற முடியும் என எண்ணியதாகவும் கொரோனாவைரஸ் அதற்கு தடையாக அமைந்ததாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 130 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக விமானநிலயம் மூடப்பட்டதால் , தமது நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் பதிரகே சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுநாயக்கபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மூடப்பட்டதுடன் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்முதலாம் திகதி திறக்கப்பட உள்ளது.