கொரோனா தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்காமல் இருக்க சவூதிஅரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சவூதி நாட்டவர்கள் மற்றும் தற்போது அங்கு வேலை நிமிர்த்தம் இருப்பவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.